444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் உத்தரவு


444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் உத்தரவு
x

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மதுரை


குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 444 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார்.

அதில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 138 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றகோரி 27 மனுக்கள், சாதிச்சான்றுகள் வேண்டி 2 மனுக்கள் மற்றும் இதர சான்றுகள் நிலம் தொடர்பான 57 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான ஒரு மனு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 30 மனுக்கள் பெறப்பட்டன.

444 மனுக்கள்

மேலும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பாக 22 மனுக்கள், சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பான 12 மனுக்கள், புகார் தொடர்பான 13 மனுக்கள், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியது தொடர்பான 14 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் எந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான 14 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 3 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், ராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பாக 9 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 102 என மொத்தம் 444 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story