440 லிட்டர் சாராயம் பறிமுதல்


440 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 9:56 AM GMT)

மயிலாடுதுறை பகுதியில் 440 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் 440 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாராயம் விற்பனை

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை அய்யனார்கோவில் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல்லவராயன்பேட்டை அய்யனார் கோவில் பகுதியில் சாராயம் விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முத்து மகன் அபினாஷ் (வயது 22) என்பது தெரிய வந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினாசை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் சாராயம் விற்ற கொழையூர் பெரியத்தெருவைச் சேர்ந்த செந்தில் என்கிற கார்த்திகேயன் (42), தம்புசாமி மகன் வீரன் (28), மணல்மேட்டுச் சாலை தெருவைச் சேர்ந்த கணபதி மகன் மாரியப்பன் (38) ஆகிய 3 பேரையும் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் வீதம் 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story