பிரிந்த 4 தம்பதிகள் மக்கள் நீதிமன்றம் மூலம் மீண்டும் இணைந்தனர்;1579 வழக்குகளுக்கு தீர்வு


பிரிந்த 4 தம்பதிகள் மக்கள் நீதிமன்றம் மூலம் மீண்டும் இணைந்தனர்;1579 வழக்குகளுக்கு தீர்வு
x

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம், பிரிந்திருந்த 4 தம்பதிகள் மீண்டும் இணைந்தனர். மேலும், 1,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம், பிரிந்திருந்த 4 தம்பதிகள் மீண்டும் இணைந்தனர். மேலும், 1,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகியோர் கோர்ட்டுகளில் நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்ற தொடக்க நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது.

நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அருள்முருகன் தொடங்கி வைத்தார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், குற்றவியல் நீதிபதி தாயுமானவர், விரைவு நீதிமன்ற (காசோலை) நீதிபதி கீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

4 தம்பதிகள் இணைந்தனர்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள சொத்து சம்பந்தமான வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து சம்பந்தமான வழக்குகள், குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி 2,360 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,579 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.7 கோடியே 57 லட்சத்து 55 ஆயிரத்து 874 வழங்க ஆவணம் செய்யப்பட்டது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் பிரிந்திருந்த 4 தம்பதிகள் இணைந்தனர்.


Next Story