சாராயம் கடத்திய 4 பேர் கைது


சாராயம் கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:46 PM GMT)

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் மானம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (38) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல் இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த தேவூர் ராணி அய்யர் தெருவை சேர்ந்த சக்திவேல் (41), திருச்செங்காட்டங்குடி வடக்குதெருவை சேர்ந்த ரமேஷ் மகன் சுபாஷ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story