சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது


சங்கராபுரம் அருகே    சாராயம் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:47 PM GMT)

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கொசப்பாடி, பொய்க்குணம், செம்பராம்பட்டு, நெடுமானூர் ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கொசப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதான 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story