கடலுக்கு சென்ற மண்டபம் மீனவர்கள் 4 பேர் மாயம்...!


கடலுக்கு சென்ற மண்டபம் மீனவர்கள் 4 பேர் மாயம்...!
x

மண்டபம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகினர்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் மீனவர்களின் உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து மண்டபம் மீன்வளத்துறையினர் விசாரித்து வருகின்றனர். காற்றின் போக்கில் படகு நகர்ந்து இலங்கை கடற்பகுதியில் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story