தக்கலை அருகே கார் மோதி 4 பேர் காயம்


தக்கலை அருகே கார் மோதி 4 பேர் காயம்
x

தக்கலை அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

4 பேர் காயம்

மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவை சேர்ந்தவர் தனேஷ்குமார் (வயது 30). இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தக்கலை அருகே தென்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி தனேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து சென்றவர் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் தனேஷ்குமார், தக்கலை முல்லை நகரை சேர்ந்த தீபக் கிருஷ்ணன் (20), வெட்டிக்கோணத்தை சேர்ந்த ராம் கார்த்திகேயன் (19), வெட்டுக்காவிளையை சேர்ந்த அஸ்வின் (18) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டிய தென்கரை தோப்பு பகுதியை சேர்ந்த ஆதித்யன் பார்த்தசாரதி (34) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story