படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x

மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

படகு கவிழ்ந்தது

நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் (வயது 45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜகுமார் (31), செண்பகம் (48), மனோ (33) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சத அலையில் படகு சேதம் அடைந்து கவிழ்ந்தது.

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

படகு கவிழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் 4 பேரும் கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது மீன்பிடித்து கொண்டு மற்றொரு படகில் வந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தது கொண்டிருந்தவர்களை பார்த்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு தங்களது படகில் ஏற்றி கொண்டு கரைக்கு வந்தனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் என்ஜின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால் மீனவர்கள் சோகத்தில் உள்ளனர்.


Related Tags :
Next Story