மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய 4 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

மணல் கடத்திய 4 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரணிைய அடுத்த தச்சூர், மோட்டூர், அகிலாண்டபுரம், மொழுகம்பூண்டி, மேல்சிசமங்கலம் ஆகிய கிராமங்களில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டூர் சுடுகாடு மற்றும் அகிலாண்டபுரம் பகுதிகளில் செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்திவரப்பட்டது தெரிந்தது.

போலீசாரை கண்டதும் 4 மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் தப்பியோடி விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, வெள்ளை கணேசன், சதுப்பேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி, ஜெயசீலன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story