35½ பவுன் நகை மாயம்


35½ பவுன் நகை மாயம்
x

35½ பவுன் நகை மாயம்

சிவகங்கை

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி(வயது 53). இவர் இங்குள்ள தொடக்க கூட்டுறவு வங்கியில் தலைமை எழுத்தராக உள்ளார். இவர் தனது வீட்டில் 75 பவுன் நகைகள் வைத்துள்ளார். கடந்த மாதம் 5-ந் தேதி சில நகைகளை போட்டு ஒரு விசேஷத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து அனைத்து நகைகளையும் ஒரு பேக்கில் வைத்து பூட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி பேக்கை திறந்து பார்க்கும்போது 39 ½ பவுன் நகைகள் மட்டும் தான் இருந்துள்ளது. மீதி 35½ பவுன் நகைகளை காணவில்லை. நகைகளை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


Related Tags :
Next Story