தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராமர் (வயது 51). கூலித்தொழிலாளியான இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் விசாரித்து ராமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story