விவசாயியை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை


விவசாயியை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

விவசாயியை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள மாடக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ்(வயது 55). இவருடைய அண்ணன் பாலு (60). இவர்களுக்கு சாத்தமங்கலத்தில் தட்டார காளியம்மன் கோவில் குலதெய்வமாக உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவதில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பாலு தரப்பினர் கனகராஜ் மற்றும் பாண்டி ஆகியோரை தாக்கினர். இது குறித்து பாலு, விக்னேஷ் (32), சரவணன் (32), முருகையா (32), தினேஷ் (30), மகேஸ்வரி (55) ஆகிய 6 பேர் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து, குற்றம் சாட்டப்பட்ட விக்னேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், முருகையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்வேலவன் ஆஜராகினார்.


Related Tags :
Next Story