புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேர் கைது
x

நெல்லை சந்திப்பில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையில் போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு மருந்து பொருட்கள் வருவது போல் பார்சல்களில் குட்கா புகையிலை பொருட்கள் வந்திருந்தது. போலீசாரை பார்த்தவுடன் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே போலீசார் அந்த 6 பார்சல்களையும் பறிமுதல் செய்து புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வாங்கி வந்த நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் பார்சல் வந்த முகவரி உள்ளிட்ட விவரங்களை வைத்து விசாரணை நடத்தி புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வாங்கி வந்ததாக பாவூர்சத்திரத்தை சேர்ந்த வீமராஜன் (வயது 41) பூலாங்குளத்தை சேர்ந்த சிவன்பாண்டியன் (40), ராஜபெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story