கஞ்சாவுடன் 3 பேர் கைது


கஞ்சாவுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் கசாப்புக்காரர் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம்(வயது 24). இவர் இந்நகர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே 10 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விருதுநகர் கலைஞர் நகர் சிவன் கோவில் அருகே ஆயர்பத்தை சேர்ந்த பிரதீப்(24), விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த கனக முனீஸ்வரன்(23) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் 20 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தனர், அவர்களையும் போலீசார் கைது செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story