கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் சிவகாசி பாரதிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அடையும் வகையில் நின்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 34), முருகன் (40), காளீஸ்வரன் (24) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் தலா 15 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 45 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story