விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை


விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
x

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ. 3 லட்சம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ. 3 லட்சம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊக்கத்தொகை

தமிழகஅரசு வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-2024-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகள் அக்ரிநெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத்தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

விண்ணப்பம்

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும், பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கான அக்ரிநெட் வலைத்தளத்தில் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story