ஒரத்தநாடு அருகே, பின்னால் வந்த கார் மோதியது: வயலுக்குள் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்


ஒரத்தநாடு அருகே, பின்னால் வந்த கார் மோதியது: வயலுக்குள் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்
x

ஒரத்தநாடு அருகே, பின்னால் வந்த கார் மோதியதில் வயலுக்குள் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது47). இவர் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி (40). மகள் மதுராபாஷினி (5). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை காரில் வல்லம் பிரிவு சாலை வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.காரை சரவணன் ஓட்டிச் சென்றார். இவர்கள் சேதுராயன்குடிக்காடு பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த மற்றொரு கார் சரவணன் ஓட்டிச் சென்ற கார் மீது மோதியது. இதில் சரவணனின் கார் நிலை தடுமாறி சாலையோர நடவு வயலில் தலைக் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரவணன், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகள் மதுராபாஷினி ஆகிய 3 பேரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story