குமரி மாவட்டத்துக்கு 28-ந் தேதி உள்ளூர் விடுமுறைகலெக்டர் அரவிந்த் அறிவிப்பு


குமரி மாவட்டத்துக்கு 28-ந் தேதி உள்ளூர் விடுமுறைகலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
x

குமரி மாவட்டத்துக்கு 28-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

அதே சமயத்தில் 28-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story