வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள்-ரூ.50 ஆயிரம் கொள்ளை
கொரடாச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள்- ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொரடாச்சோி:
கொரடாச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள்- ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் கும்பகோணத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். வீட்டில் துணைக்கு யாரும் இல்லாததால் அமுதா தனது வீட்டின் எதிரே உள்ள உறவினர் வீட்டில் இரவில் தங்கி வருவது வழக்கம்.
21 பவுன் நகைகள்-ரூ.50 ஆயிரம் கொள்ளை
நேற்று முன்தினம் இரவு அமுதா தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு நேற்று காலை தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அமுதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அமுதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 21 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ைள போனது தெரிய வந்தது.
வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.