20,992 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


20,992 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தேர்வினை 20,992 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் 959 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தேர்வினை 20,992 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் 959 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

பொதுத்தேர்வு

மாநிலம் முழுவதும் நேற்று பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 100 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.

தேர்வினை 10,532 மாணவர்களும் 11,419 மாணவிகளும் ஆக மொத்தம் 21,951 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,947 மாணவர்களும், 11,045 மாணவிகளும் ஆக மொத்தம் 20,992 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 585 மாணவர்களும், 374 மாணவிகளும் ஆக மொத்தம் 959 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆய்வு

நேற்று நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வினை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேர்வு துறை இயக்கக இணை இயக்குனர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Related Tags :
Next Story