தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 15 May 2022 9:04 AM GMT (Updated: 15 May 2022 9:34 AM GMT)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1, 2, 3, 4, 5 ஆகிய ஐந்து அலகுகளிலும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story