குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை...!
குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மதியத்திற்கு பிறகு மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். நேற்று மதியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது.
தொடர்ந்து மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிதமாக வந்து கொண்டு இருக்கிறது.
Related Tags :
Next Story