"மழைக்காலத்தில் அரசியல் செய்வது தவறானது" - கனிமொழி எம்.பி


மழைக்காலத்தில் அரசியல் செய்வது தவறானது -  கனிமொழி எம்.பி
x
தினத்தந்தி 10 Nov 2021 12:48 PM GMT (Updated: 10 Nov 2021 12:48 PM GMT)

மழை காலங்களில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறான ஒன்று என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக திமுக எம்.பி கனிமொழி கருத்து கூறியுள்ளார்.  சென்னை தி.நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல முறை வெள்ள பாதிப்புக்கு சென்னை ஆளாகியுள்ளது.

இது ஒரே நாளில் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் கிடையாது. நீர் வழிப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குழப்பம் உள்ளது. இவைகளை சரி செய்வதற்கு முழுமையான திட்டம் வகுக்கப்படும். மழை காலங்களில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறான ஒன்று” என்றார்.

Next Story