ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 28 ஆம் தேதி முதல் 2019 ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி வரை, 139 நாட்களுக்கு 961 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
நீர் திறப்பால் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் உயர்மகசூல் பெற வேண்டுமெனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story