தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்பாண்டியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பொன் பாண்டிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story