அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு அரவைக்காக தலா ஆயிரம் டன் நெல் சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு அரவைக்காக தலா ஆயிரம் டன் நெல் சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.முன்னதாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து அரவைக்காக ஈரோட்டுக்கு ஆயிரம் டன் நெல்லும் , கோவைக்கு ஆயிரம் டன் நெல்லும் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story