அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக  2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story