அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

திருவாரூர்

நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தெற்குநத்தம், இடையர் நத்தம், அரவத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக வடசென்னைக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story