அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

திருவாரூர்

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், தெற்குநத்தம், இடையர்நத்தம், ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் திறந்த வெளிசேமிப்பு மையங்கள் உள்ளன. இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். தொடர்ந்து நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story