கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

அம்பையில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை மருதப்பபுரம் தெற்கு வாகைகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 35). சுத்தமல்லி கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துராமன் (38). இவர்களை அம்பை போலீசார் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்தனர். இந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, இசக்கிமுத்து, முத்துராமன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை அம்பை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.


Next Story