சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது


சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:45 PM GMT)

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுசந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிள் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரகள் நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்த பாஸ்கரன் மகன் அருண்குமார்(வயது23), வெளிப்பாளையம் தியாகராஜபுரத்தை சேர்ந்த சேவு மகன் ஜான் (31) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story