வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2023 6:59 PM GMT (Updated: 21 Jun 2023 12:23 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலி தொழிலாளி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 60). கூலி தொழிலாளியான இவரது ஒரே மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றில் இருந்து அவர் மகளின் நினைவாகவே இருந்து வந்்தார். மேலும் அவர் பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளித்து தற்கொலை

மண்ணச்சநல்லூர் கீழ அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி (44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். விசுவநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சித்ராதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story