வெவ்வேறு விபத்துகளில் மாணவி உள்பட 2 பேர் படுகாயம்


வெவ்வேறு விபத்துகளில் மாணவி உள்பட 2 பேர் படுகாயம்
x

வெவ்வேறு விபத்துகளில் மாணவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி புதுரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி பாண்டியம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அருண்நகரை சேர்ந்த மாரிமுத்துப்பாண்டி மகன் ராஜபாண்டி, பாண்டியம்மாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராஜபாண்டி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி விநாயகர் கோவில்தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் மகள் அமலசுபிக்ஷா (10). இவர் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சாத்தூர் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மீனம்பட்டியை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் சின்னப்பராஜ் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரது மாணவியின் தந்தை ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story