கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்


கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரபீக் மகள் ரேஷ்மா (வயது 21). தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்த இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் ரேஷ்மாவை காணவில்லை. பின்னர் இதுகுறித்து முகமது ரபீக் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கீழ்பூண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து மகள் தமிழ்செல்வி(16). இவர் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேசென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் தமிழ்செல்வியை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story