திண்டிவனத்தில்வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது


திண்டிவனத்தில்வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2023 6:45 PM GMT (Updated: 8 Jan 2023 6:45 PM GMT)

திண்டிவனத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் உமர்சாகிப் தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா மனைவி தவுலத் (வயது 39). சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த வெள்ளி பிரெஸ்லெட், ரூ.600 ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தவுலத்தின் வீட்டில் நகை, பணத்தை திருடியவர்கள் ஓ.பி.ஆர். பார்க் பின்புறம் உள்ள புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(26), அஜய்(24) என்பது தொியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 300 கிராம் வெள்ளி பிரெஸ்லெட், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story