2 மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு


2 மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
x

நெல்லையில் 2 மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டின் முன்பு வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து சாலையில் ஓட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் நெல்லை டவுன் வடக்கு அனவரதவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் கணேஷ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story