வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் மாயம்


வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் மாயம்
x

வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் மாயமானார்கள்.

திருச்சி

திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் லெசிங்டன் பெர்னாண்டோ. இவரது மகள் ஜோபினா (வயது 15). இவர் திருச்சி கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கே.கே.நகர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஜோபினாவை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி பழைய கரூர் ரோடு பகுதியை சேர்ந்த மது கணேசனின் மகள் பானுஸ்ரீ(18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பானுஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மதுகணேசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுஸ்ரீயை தேடி வருகின்றனர்.


Next Story