சாராயம் விற்ற 2 தம்பதி கைது


சாராயம் விற்ற 2 தம்பதி கைது
x

குடியாத்தத்தில் சாராயம் விற்ற 2 தம்பதி கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த நீலகண்டன் (வயது 50), அவரது மனைவி சுந்தரி (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் தனகொண்டபல்லி கிராமத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சேட்டு (65), அவரது மனைவி அன்பு (60) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story