பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி


பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி
x

பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் லோகேஷ், சப்தகிரி. இதில் சிறுவன் சப்தகிரி 6ம் வகுப்பும், சிறுவன் லோகேஷ் 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள பம்பு செட்டில் இன்று மாலை குளிக்க சென்றனர். இருவரும் பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்தது.

இதில் பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story