திருட்டு வழக்கில் 2 பேர் கைது


திருட்டு வழக்கில் 2 பேர் கைது
x

திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி திம்மளராஜபுரம் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 26). இவர் வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து செல்லையா கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தி கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்துரு (22), தம்பிரான் என்ற அருள் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.


Next Story