150 லிட்டர் சாராயம் பறிமுதல்


150 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 May 2023 6:45 PM GMT (Updated: 9 May 2023 6:46 PM GMT)

நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படியும், மாவட்டத்தில் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூர் - திட்டச்சேரி சாலையில்நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

தப்பிய ஓடினர்

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், போலீசாரை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளில் சோதனை செய்தனர். இதில் 150 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

150 லிட்டர் சாராயம் பறிமுதல்

தப்பி ஓடியவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராத்தை கடத்தி வந்த போது போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.இதையடுத்து 150 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story