தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் 135 பேர் தேர்வு


தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் 135 பேர் தேர்வு
x

தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் 135 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்காக மண்டல அளவிலான தொழிற்பழகுனர் பயிற்சி சேர்க்கைக்கான முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுனர்களை தேர்வு செய்தனர்.

இதில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 15 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான தொழிற்பழகுனர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் 135 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான ஆணையை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.


Next Story