எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15   பேர் இலங்கை கடற்படையால் கைது
x
தினத்தந்தி 9 July 2023 12:58 AM GMT (Updated: 9 July 2023 5:09 AM GMT)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் ௧௫ பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.


Next Story