போலி பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது


போலி பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:45 PM GMT)

போலி பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

போலி பிட்காயின் மூலம் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.12 லட்சம் மோசடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வவ்வால்தொத்தி ஊரைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). இவரது முகநூல் கணக்கில் பிட்காயின் முதலீடு சம்பந்தமாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. இதனை பார்த்த ராமர், அதில் உள்ள லிங்க் மூலம் உள்ளே சென்றுள்ளார். பின்னர் அதில் இருந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு, அவர்கள் கொடுத்த இணையதளத்தில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 740 முதலீடு செய்துள்ளார்.

அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர், இதுபற்றி தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், வசந்தகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக கடந்த 3-ந் தேதி கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால் (38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மடிக்கணினி- செல்போன்கள் பறிமுதல்

அவரிடம் இருந்து ஒரு மடிக்கணிணி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யபப்பட்டது. கைதான ஓபேத் பால், தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Next Story