11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி


11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி
x

நாகை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டை விட குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டை விட குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி நாகை மாவட்டத்தில் வெளியான தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வெளியிட்டார்.

நாகை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதத்தேர்வை 3917 மாணவர்களும், 4169 மாணவிகளும் என மொத்தம் 8086 பேர் எழுதினர். இதில் 3147 மாணவர்களும், 3853 மாணவிகளும் என 7,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.

86.57 சதவீதம் பேர் தேர்ச்சி

மாணவர்கள் 80.34 சதவீதமும், மாணவிகள் 92.42 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாகை மாவட்டத்தில் மொத்தம் 86.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7.65 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டத்தில் கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பஞ்சநதிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாணவ-மாணவிகள் ஆர்வம்

அதேபோல 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 16 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 18 பள்ளிகள் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 11-ம் பொதுத் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் செல்போனில் பார்த்தனர்.


Next Story