108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்து தேர்வு


108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 10:20 AM GMT)

வடலூரில், நாளை 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

கடலூர்

108 அவசர கால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடலூர் வள்ளலார் சபை எதிரே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (பிளஸ் -2 க்கு பிறகு 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி.வேதியியல், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி) பங்கேற்கலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15 ஆயிரத்து 435 ஊதியம் வழங்கப்படும்.

டிரைவர் பணிக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.15 ஆயிரத்து 235 ஊதியம் வழங்கப்படும்.

அசல் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28888060, 044-28888075, 044-28888077, 9154251148, 9154251630 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story