108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை


108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:46 PM GMT)

108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே உள்ள மருதங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா என்பவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 28). நேற்று முன்தினம் முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வரும் வழியில் தெற்கு மல்லல் கிராமத்தின் அருகே முத்துலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் முத்துப்பாண்டியன், டிரைவர் தங்ககுமார் ஆகியோர் ஆம்புலன்சில் முத்துலட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் முத்துலட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்சில் முத்துலட்சுமிக்கு உரிய முறையில் பிரசவம் பார்த்தவர்களை குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.


Next Story