அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை 100% நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெயக்குமார் பேட்டி


அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை 100% நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2022 1:15 PM GMT (Updated: 8 July 2022 2:08 PM GMT)

அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை 100% நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து வெளியே விவாதிப்பது என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம் கிடையாது. விவாதங்கள் முடிந்து விட்டன. எனவே ஒரு நல்ல தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி அதிமுக பொதுக்குழு குறித்து வரும் திங்கள்கிழமை 100% நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story