தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்


தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
x

தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையத்தை சேர்ந்தவர் இமானுவேல் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இமானுவேலை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவில், மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளி இமானுவேலுக்கு 10 ஆண்டுகள் ஜெயிலும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story