தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் ெதால்லை அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது44), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3.7.2019 அன்று 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி முனியசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story